ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகன்னாதனுக்கு பிரிவு உபசார விழா நடத்தியதன் மூலம் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஆளுநர் ஏற்படுத்தி விட்டதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கண்டனம் தெரிவித்துள்ளார். வேந்தர் என்ற பதவிக்குரிய கண்ணியத்தை ஆளுநர் தவறவிட்டுள்ளதாக அவர் கூறினார்.