இந்திய ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். நாட்டை கண்ணிமை போல் பாதுகாத்து வரும் ராணுவ வீரர்களின் தியாகத்தை வணங்குபவன் தாம் என்றும், தனது பேச்சால் ராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்குமேயானால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் கூறியுள்ளார்.