Also Watch
Read this
Updated: May 04, 2025 11:00 AM
By: Srini Vasan
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் பாஜக - அதிமுக கூட்டணியை குறை சொல்வதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதுடன், குடிப்பதற்கு தண்ணீரும் இல்லை என குற்றஞ்சாட்டினார்.
இவற்றையெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனிக்காமல் பாஜக - அதிமுக கூட்டணியை குறை மட்டுமே கூறி வருவதாக பேசினார்.
© Copyright Newstamil 24x7 2025. All rights reserved