தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருவதாகக் கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஈரோடு விளாங்காட்டு வலசு கிராமத்தில் முதிய இணையரை அடித்துக் கொலை செய்து, 15 பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த நிலையை மாற்றி மக்களிடம் நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.