இந்தியாவின் எல்லையோர மாநிலங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் கையாளும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தை ஒட்டிய எல்லையோர மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், மாநில பேரிடர் மீட்பு படை, NCC, ஊர்க்காவல் படை உள்ளிட்ட மீட்பு மற்றும் நிவாரண படைகளை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தினார். அனைத்து விதமான ஊடக தளங்களிலும் தேசவிரோத பிரச்சாரங்களை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், அச்சுறுத்தல் மிகுந்த இடங்களில் தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தவும் கேட்டுக் கொண்டார்.