அதிமுக - பாஜக கூட்டணிக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் வரும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றபின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திங்கட்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத பிரச்சனை குறித்து பேசவில்லை என்றும், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேசியதாகவும் தெரிவித்தார். மேலும் மதங்கள் குறித்து பேசுவதாக தூண்டிவிடுவதே முதலமைச்சர் தான் எனவும் குற்றம்சாட்டினார்.