பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கட்டாய கல்வி உரிமை திட்டத்தின் கீழ், 2025 -2026 ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையினை இதுவரை பூர்த்தி செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். RTE திட்டத்திற்கு மத்தியஅரசு நிதி ஒதுக்கினால் தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என பொறுப்பற்ற முறையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசி வருவதாக கூறினார்.