சென்னை மாகாணத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் 100 சதவீத இடப்பங்கீடு வழங்குவதற்கான அரசாணை 97 ஆண்டுகளுக்கு முன் சுப்பராயன் தலைமையிலான அரசில், கல்வித்துறை அமைச்சராக இருந்த முத்தையா முதலியாரால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நாள் இன்று என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இன்றும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாத சமுதாயங்கள் ஏராளமான உள்ளன எனவும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் அனைவருக்கும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் 100 சதவீத இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள் தான் உண்மையான சமூகநீதி நாள் எனவும் தெரிவித்துள்ளார்.