மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பேருந்துக்குள் வைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது செய்யப்பட்டான். 36வயதான ராம்தாஸ் கடே என்பவன் மீது ஏற்கனவே 6 வழக்குகள் உள்ள நிலையில், தலைமறைவாக இருந்த அவனை பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 2 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்யப்பட்டான்.