பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானாவை சேர்ந்த பெண் டிராவல் யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு முதல்முறையாக பாகிஸ்தானுக்கு சென்ற ஜோதி மல்ஹோத்ராவுக்கு, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரியான எஹ்சான்-உர்-ரஹீமுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் அந்த அதிகாரி, ஜோதி மல்ஹோத்ராவை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர், இந்திய ராணுவத்தினர் இருப்பிடம் மற்றும் இயக்கம் குறித்த விவரங்களை பாகிஸ்தானுக்கு அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இவர் உட்பட 6 பேர் கைது பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.