ஆந்திராவில் கின்னஸ் சாதனைக்காக, 5 லட்சம் பேர் பங்கேற்கும் மெகா யோகா நிகழ்ச்சியை நடத்த அம்மாநில சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. சர்வதேச யோகா தினமான ஜூன் 21 ஆம் தேதியன்று, விசாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து பீமிலி கடற்கரை வரை 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு யோகாசனம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில், அனக்கா பள்ளி, அல்லூரி சீதாராம ராஜ், விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 5 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். கின்னஸ் சாதனைக்காக இந்த யோகாசனம் நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும்,அதில் பங்கேற்போருக்கு மாநில அரசு சார்பில் சான்றிதழ் வழங்கவிருப்பதாகவும் மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தலைமை செயலாளர் கிருஷ்ணா பாபு தெரிவித்தார்.