புரோ கபடி லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் அணி வெற்றி பெற்று, தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய உ.பி.யோத்தாஸ் அணி, ஆட்ட நேர முடிவில் 36-க்கு 33 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தியது.