யமுனை நதி நீர் மாசுபாடு தொடர்பாக, இன்று மதியத்திற்குள் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய ஹரியானா அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. யமுனை நதி நீரில் அமோனியாவின் அளவு அதிகரித்துள்ளதால், டெல்லியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு ஹரியானா அரசுதான் காரணம் என்றும் டெல்லி முதல்வர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.