பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த பிரதமர் மோடிக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசியலமைப்பு குறித்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் பெருமை களங்கப்படுத்தப்பட்ட போது மோடி பீகாரில் தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டினார்.அனைத்து கட்சித் தலைவர்களும் பங்கேற்ற கூட்டத்தில் மோடியும் கலந்து கொண்டு பயங்கரவாதிகளை ஒழிப்பது பற்றி தமது திட்டத்தை அறிவித்திருக்க வேண்டும் என கார்கே குறிப்பிட்டார்.மோடி பணவீக்கத்தையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் நாட்டுக்கு பரிசாக வழங்கியுள்ளதாக கேலி செய்த அவர், மோடியின் 52 இஞ்சு மார்பளவு இப்போது சுருங்கி விட்டதாக விமர்சித்தார்.