2024-2025ஆம் நிதியாண்டின் நான்காவது காலிறுதியில் வேதாந்தா நிறுவனம் 4 ஆயிரத்து 961 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரிக்கு பிந்தைய லாபத்தில், கடந்த நிதியாண்டை விட வருவாய் 118 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் வேதாந்தா நிறுவனத்தின் வருவாய் 172 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதுவே அந்நிறுவனத்தின் மிக உயர்ந்த வருடாந்திர லாபம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுமினியம், துத்தநாகம் மற்றும் இரும்பு தாது உள்ளிட்டவற்றால் வேதாந்தா நிறுவனத்தின் ஒட்டு மொத்த ஆண்டு வருவாய் 1.51 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.