மகாராஷ்டிராவை காட்டிக்கொடுத்த பாவம் கங்கையில் நீராடுவதால் கழுவப்படாது என ஏக்நாத் ஷிண்டேவை குறிப்பிட்டு உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள உத்தவ் தாக்கரே, கங்கையில் நீராடினால் துரோகி என்ற பட்டம் போகாது என்றும்,புதிய இந்துத்துவவாதிகள் தங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.