உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான அறிகுறிகள் தென்படாவிட்டால், அதனை மத்தியஸ்தம் செய்யும் முயற்சி கைவிடப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. பாரிசீல் ஐரோப்பிய மற்றும் உக்ரைன் தலைவர்களை சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ, உக்ரைன் - ரஷ்யா இடையேயான அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள அதிபர் டிரம்ப் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். அதற்காக மாதக்கணக்கில் இந்த விவகாரத்தை இழுத்துச் செல்ல விரும்பவில்லை என்ற அவர், உலகம் முழுவதும் முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்னைகள் இருப்பதால், விரைந்து முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.