அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவு ஆலோசகராக தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்திய அமெரிக்கரான இவர், சென்னையில் பிறந்து தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர். மைக்ரோசாஃப்ட், டுவிட்டர், யாகூ, பேஸ்புக் நிறுவனங்களிலும் பணியாற்றி உள்ளார்.