இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களான ராமாயணமும், மகாபாரதமும் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மொழி பெயர்த்த அப்துல்லா அல்-பரூன், அச்சிட்ட அப்துல் லத்தீப் அல்-நெசெஃப் ஆகியோர் குவைத் சென்ற பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதுகுறித்த எக்ஸ் பதிவில், உலகளவில் இந்திய கலாசாரத்தின் பிரபலத்தை எடுத்துக் காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.