சூழும் ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். மண்ணின் மைந்தர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் ஆகியவற்றில் உரிய பங்கை பெற்று தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற பிராமணர் அல்லாதோர் கொள்கையை செயல்படுத்தி காட்டுவதற்காக தமது தாய் அமைப்பான நீதிக்கட்சி தலை தூக்கிய நாள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், நீதிக்கட்சியின் நீட்சியே திராவிட மாடல் ஆட்சி என்று தொடர்ந்து மெய்ப்பிப்போம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.