உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு முதல் அனைத்து தேவாலயங்களிலும் கூட்டு திருப்பலி நடைபெற்றன. இதில் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்டது. புத்தாடை அணிந்து தேவாலயத்தில் குவிந்த கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.