உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களின் சிறைச்சாலைகளில் நடைமுறையில் இருக்கும் விதிமுறைகள் சாதிய பாகுபாடுகளை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளதால் அதனை 3 மாதத்திற்குள் மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களை சிறைகளில் பாகுபாடுடன் நடத்தக்கூடாது என்றும் தண்டனை குறைப்பு, சிறைகளில் சுத்தம்செய்வது, சமையல் செய்வது போன்ற பணிகளில் சாதி சார்ந்த பாகுபாடு காட்டக் கூடாது என்றும் சாதி கட்டமைப்பால் விளிம்பு நிலை மக்கள் நுற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம் Habitual Criminals என்று குறிப்பிடும் சிறை விதிமுறைகள் அரசியல் சாசனம் 14,15,17,21,23 க்கு எதிரானது, எனவே, சிறை விதிமுறைகளையும் 3 மாதத்தில் மாற்ற வேண்டும்” என தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.