ஜனநாயகத்தில், நீதிமன்றம், சட்டமன்றம் மற்றும் சட்ட அமலாக்கம் ஆகிய 3 தூண்களும் சமம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தெரிவித்தார். மகாராஷ்டிராவின் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தலைமை செயலாளர், டி.ஜி.பி., காவல் ஆணையர் பங்கேற்காதது குறித்து அதிருப்தி தெரிவித்தார். அரசியல் சாசன அமைப்புகள் ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு உரிய மதிப்பு கொடுக்க வேண்டும் என்றார்.