ஆந்திராவில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த ஆசிரியையிடம் செயினை பறித்துக் கொண்டு தப்பிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தாடிபத்திரிபட்டினம் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் ராஜலட்சுமி, வீட்டின் முன் கோலம் போட்ட போது முன்னால் ஒருவன் பைக்கில் சென்று காத்திருக்க, மற்றொருவன் செயினை பறித்துக் கொண்டு பைக்கில் ஏறி தப்பிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.