தமிழகம், புதுவையை சேர்ந்த 35 மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி, மன வேதனையை அளிப்பதாகக் கூறியுள்ள விஜய், மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையை தமிழக மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசும் தாமதிக்காமல், மத்திய அரசுக்கு உண்மையாக அழுத்தம் தர வேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.இனி, இதுபோல் நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன் என்றும் விஜய் கூறி உள்ளார்.