ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் போராடி வெற்றி பெற்றார். பர்மிங்காம் நகரில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் லக்ஷயா சென், தைவானின் சு லீ யாங் உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை லக்ஷயா சென் 13க்கு 21 என இழந்தார். இதனால் சுதாரித்து கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 21க்கு 17 மற்றும் 21க்கு 15 என்ற செட் கணக்கில் போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.