சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 2026- ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் திமுக ஆட்சி அமைய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. திமுக செயற்குழு கூட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.