பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆல் பாஸ் நடைமுறையை ரத்து செய்ததாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த வகுப்புகளில் நடத்தப்படும் தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு 2 மாதங்களில் மறு தேர்வுக்கான வாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. அதிலும் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே வகுப்புகளில் மாணவர்கள் தக்கவைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.