மத்திய அரசு நாட்டை தவறாக வழி நடத்துவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர், சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி சிங்கப்பூரில் அளித்த பேட்டிக்கு பிறகு, கேட்கப்பட வேண்டிய மிகவும் முக்கியமான கேள்விகள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரை உடனடியாக கூட்டினால் மட்டுமே இவற்றை செய்ய முடியும் என கூறியுள்ளார். பிரதமர் மோடி அரசு நாட்டை தவறாக வழி நடத்தியுள்ளதாகவும், போர் மூட்டம் இப்போது நீங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.