மிகப்பெரிய தாக்குதல் நிச்சயம் என இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு, அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த சூழலில், இஸ்ரேலில் உள்ள விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோவில், ஹவுதி அமைப்புக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.