இந்தியாவில் உள்ள தலைசிறந்த மருத்துவமனைகளை விட, தமிழக அரசு மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவ உபகரணங்கள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசிய அவர், நோயாளிகள் அரசு மருத்துவ சேவையை நம்பவும், மதிக்கவும் தொடங்கி இருப்பதாக தெரிவித்தார்.