டெல்லியில் தமிழர்கள் வாழும் பகுதியை அகற்ற முடிவு செய்துள்ள அம்மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.டெல்லி ஜங்க்புரா பகுதியில் மேம்பால புனரமைப்பு, கால்வாய் தூர்வாரும் பணி உள்ளிட்டவற்றிற்காக மதராசி குடியிருப்பு பகுதிகளை அகற்ற முடிவு செய்து அங்கு வாழும் குடும்பங்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாற்று இடம் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் பள்ளி குழந்தைகள் மற்றும் பணிக்குச் செல்வோர் பாதிக்கப்படுவர் என்பதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, டெல்லி காந்தி சமாதி பகுதியிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி தமிழ் மக்கள் பேரணியாக செல்ல முயன்ற போது காவல்துறையினர் அவர்களைஅப்புறப்படுத்தினர்.