டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் திருப்பூர் அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்று அசத்தியது. கோவையில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.