ஜப்பானில் 6 புள்ளி 9 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்கு பகுதியான கியூஷுயில் ((Kyushu)) 37 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், கட்டடங்கள் போன்றவை பயங்கரமாக குலுங்கியதால், பொதுமக்கள் அவற்றை விட்டு வெளியேறி சாலைகளில் தலைதெறிக்க ஓடினர்.