வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நாளை அண்ணா அறிவாலயத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்.எல்.ஏ.க்கள், தொகுதி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், திமுக தலைமை அலுவலகமான, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தொடர்பாக விவாதிக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் பாருங்கள் - SIR | DMK Next Plan | SIR திமுகவின் அடுத்த அதிரடி | Anna Arivalayam | CM Stalin