முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சசோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆருயிர் சகோதரர் செந்தில்பாலாஜி-க்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருப்பதாகவும், எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்கை கிடையாது எனவும் கூறியுள்ளார்.