சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றினார். தொடர்ந்து 12ஆவது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரை:என் அன்பான இந்திய குடிமக்களே, இந்த சுதந்திர தின விழா பெருமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த தருணம் ஆகும். இது 140 கோடி மக்களின் கொண்டாட்டம். பாலைவனங்களாக இருந்தாலும், இமயமலையின் சிகரங்களாக இருந்தாலும், கடலின் கரைகளாக இருந்தாலும், பரபரப்பான நகரங்களாக இருந்தாலும், நாடு முழுவதும் ஒரே குரல் ஒலிக்கிறது: நாம் அனைவரும் இந்தியாவை நம் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம். 1947-ம் ஆண்டு, எல்லையற்ற சாத்தியக்கூறுகளுடனும், எண்ணற்ற ஆயுதங்களின் வலிமையுடனும், நமது நாடு சுதந்திரம் பெற்றது. ஆனால் சவால்கள் இன்னும் அதிகமாக இருந்தன.மதிப்பிற்குரிய மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்றி, அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் ஒரு மிக முக்கியமான பொறுப்பை நிறைவேற்றினர். கடந்த 75 ஆண்டுகளாக, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஒரு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக நின்று, நமது பாதையை ஒளிரச் செய்து வருகிறது.நமது துணிச்சலான வீரர்களின் வீரத்துக்கு நான் தலை வணங்குகிறேன். ’ஆபரேஷன் சிந்தூர்’ மூலம், நமது வீரர்கள், எதிரிகளை கற்பனைக்கு அப்பாற்பட்ட பலத்துடன் எதிர்த்து நின்று, பதிலளித்தனர். அணு ஆயுத மிரட்டல் நீண்ட காலமாகத் தொடர்கிறது. ஆனால், இனி பொறுத்துக் கொள்ள முடியாது. நமது எதிரிகள் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது ஆயுதப் படைகள் தங்கள் விருப்பப்படி, அவர்கள் விரும்பும் நேரத்தில், அவர்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைவதன் மூலம் பதிலடி கொடுக்கும். பொருத்தமான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்.கடந்த சில நாட்களாக, இயற்கை பேரழிவு, நிலச்சரிவு, மேகவெடிப்பு மற்றும் பல பேரிடர்களை நாம் சந்தித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபங்கள். மீட்பு நடவடிக்கை, நிவாரண முயற்சி மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் மாநில அரசுகளும் மத்திய அரசும் முழு பலத்துடன் இணைந்து செயல்படுகின்றன. சுயசார்பு இந்தியாவே, வளர்ந்த இந்தியாவின் அடிப்படை. ஒருவர் மற்றவரை அதிகம் எதிர்பார்த்திருந்தால், சுதந்திரம் என்பது மங்கத் தொடங்கி விடும். கடந்த தலைமுறை சுதந்திரத்திற்கு போராடியது; இந்த தலைமுறை சுயசார்புக்கு போராட வேண்டும். நாட்டு மக்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது. இதனால், சிறு குறு தொழில்கள் பயனடையும். விவசாயிகள், மீனவர்கள் நலனில் ஒருபோதும் சமரசமில்லை. மக்களுக்காக செயல்படுவதே அரசு, அதை நோக்கித்தான் பயணிக்கிறோம்.இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.