உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக, நவம்பர் 11-ம் தேதி சஞ்சீவ் கன்னா பதவியேற்கிறார். தற்போது உள்ள தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம், வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது.