தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ள அவர், இந்த திட்டத்திற்கான நிதி விடுவிப்பதில் மத்திய அரசு தாமதம் செய்வதால், பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்குதில் காலதாமதம் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.