டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததன் காரணமாக, டெஸ்ட்டில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு டி20 உலகக்கோப்பையை வென்று பதிலடி கொடுத்த ரோகித் சர்மா, அப்போதே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாகவும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கேப்டனாக தொடருவதாகவும் அறிவித்துள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.