ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு ரோகன் போபண்ணா ஜோடி முன்னேறியது. முதல் சுற்றில் நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ், குரோஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடியுடன் மோதிய இந்தியாவின் ரோகன் போபண்ணா, செக் குடியரசின் ஆடம் பாவ்லாசெக் ஜோடி, போட்டியை 4க்கு 6, 7க்கு 6, 10க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.