மோசமான வானிலை காரணமாக நடுவானில் குலுங்குவதை தவிர்க்க பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைவதற்கான இண்டிகோ விமானியின் கோரிக்கையை பாகிஸ்தானின் லாகூர் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே ஆலங்கட்டி மழையில் சிக்கிய நிலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதனிடையே மோசமான நிலைமையை சமாளிப்பதற்காக இண்டிகோ விமானி பாகிஸ்தான் வான்வழியாக செல்வதற்கு லாகூர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட போது, அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.