ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்தில், ஒத்திகையின் போது பாராசூட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் இரண்டு கடற்படை கமாண்டோக்கள் கடலில் விழுந்தனர். நாளை ஆர் கே கடற்கரையில் நடைபெற உள்ள கடற்படை சாகச நிகழ்ச்சிக்காக ஒத்திகையில் ஈடுபட்ட வீரர்கள் எதிர்பாரத விதமாக கடலில் வீழ்ந்த நிலையில், அவர்களை அங்கிருந்த மீட்பு படகுகள் மூலம் கடற்படையினர் மீட்டனர்.