கனடாவில் சர்வதேச மாணவர்கள் கல்வி பயில அனுமதிக்கப்படும் எண்ணிக்கை வரம்பை குறைத்து அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கனடாவில் குடியேற்றத்தை குறைக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ள நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் அனுமதி எண்ணிக்கையையும் குறைத்துள்ளது. இது குறித்து பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் பதிவில், 35 சதவீத சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனுமதி தற்போது 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். குடியேற்றம் என்பது தங்கள் பொருளாதாரத்திற்கு நன்மை தான் என்றாலும், ஆனால் சில மோசமான நபர்கள் அதனை கையில் எடுத்துக்கொண்டு தவறாக பயன்படுத்துவதால்தான் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ட்ரூடோவின் இந்த அறிவிப்பால், கனடாவில் பயிலும் சுமார் 4 லட்சத்து 27 ஆயிரம் இந்திய மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.