நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் திங்களன்று அதிகபட்சமாக 35 செண்டி மீட்டர் மழை பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தின் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்துள்ளதாகவும், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ((செவ்வாய் கிழமை முதல் ))வரும் 30- ஆம் தேதி வரை இவ்விரு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.