போர் தொடங்கி மூன்றாண்டுகளுக்கு பிறகு, முதன்முறையாக உக்ரைனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா அதிபர் புதின் விருப்பம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், எந்தவொரு அமைதி முயற்சியையும் மாஸ்கோ வரவேற்பதாகவும், அதையே உக்ரைனிடம் இருந்தும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.