பிரபல சொகுசு கார் நிறுவனமான ரேஞ்ச் ரோவர் தனது ஆட்டோபயோகிராஃபி மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் வகை கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம், சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோ கிராஃபி காரின் விலை 56 லட்சம் ரூபாய் வரை குறையும் என்பது சொகுசு கார் விரும்பிகளுக்கு இன்பச் செய்தியாக மாறியுள்ளது.