அர்ஜெண்டினாவின் வடமேற்கு பகுதி நகரமான வேரா பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஒடும் காட்சி அங்கிருக்கும் வீடு ஒன்றின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கனமழையின் போது கழிவுநீர் வடிகால் அமைப்பு உடைந்ததால், 6 மணி நேரத்தில் 420 மில்லி மீட்டர் அளவிற்கு நீர் தேங்கியதாக அந்த நகரின் மேயர் பவுலா மித்ரே தெரிவித்தார்.வெள்ள பாதிப்பில் இருந்து இதுவரை 120 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உணவு சமைக்கும் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.