ஒடிஷாவில் புகழ்பெற்ற பூரி ஜகந்நாதர் கோவில் பிரசாதத்தை சாப்பாட்டு மேசையில் வைத்து பரிமாறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பூரியில் உள்ள கடற்கரை ரிசார்ட் ஒன்றில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பூரி ஜகந்நாதர் கோவில் பூசாரி ஒருவர் சாப்பாட்டு மேசையில் வைத்து கோவில் பிரசாதத்தை பரிமாறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், கடவுள் முன்பு அனைவரும் சமம் என கூறப்படும்போது, குறிப்பிட்ட ஒரு குடும்பத்திற்கு மட்டும் கோவில் பூசாரிகள் சலுகை வழங்கியதாக பக்தர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.