நடப்பு ஐபிஎல் தொடரில் "பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு" ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா கணித்துள்ளார். 10 அணிகளுக்கு இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.